5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர்

இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர்.

சென்னையில் இருந்து மதுரைக்கு கொரோனா தடுப்பு பணிக்காக வந்த பேரிடர் மீட்பு படை வீரர் ஒருவரும் பாதிக்கப்பட்டார். 26 வயதான இவர் ரிசர்வ் லைன் பகுதி திருமண மண்டபத்தில் தங்கி பணி செய்தார். சென்னையில் இருந்து மதுரை வந்த 90 வீரர்களை சந்தேகத்தில் பரிசோதனை செய்தததில் இவருக்கு தொற்று உறுதியானது.

கரிசல்குளத்தை சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் பாதித்தவர் மூலம் இவருக்கு தொற்றியுள்ளது.